என்ன நடந்தாலும் ஈரான் பக்கமே நிற்போம் ஈராக்அறிவிப்பு

அமெரிக்கா ஈரானுக்கிடையிலான பிரச்சினையில் எப்போதும் தாம் ஈரான் பக்கமே நிற்போம் என ஈராக் தெரிவித்துள்ளது.

ஈரானை எதிர்க்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களை குவித்து வருகின்றது. அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு படைகளை அனுப்பியுள்ளது.

ஈரான் அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்தை இரத்துச் செய்திருந்தது. இதனால் ஈரானின் எண்ணெய் வழங்களை வாங்குவதற்கு உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இதனாலேயே இரு நாடுகளுக்குமிடையில் மோதல் நிலை உருவாகியது. இதனாலேயே ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. 1,20,000 துருப்புக்களை  அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் ஈராக் வெளியுறவு அமைச்சர் முகமது அலி ஹக்கீம் நேற்று ஈரான் அதிகாரிகளை சந்தித்தார். அப்போதே ஈராக்,  எப்போதும் ஈரான் பக்கமே நிற்போம் என தெரிவித்துள்ளதுடன், இந்தப் பிரச்சினையை நாம் பேசித் தீர்ப்போம் எனவும் ஈராக் தெரிவித்துள்ளது.