“எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

சுவிஸ்நாட்டின் பேர்ண் மாநிலத்தில்  “எனது மக்களின் விடுதலைக்காக – தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கருத்துத்தொகுப்பு” எனும் நூல், மீள்பதிப்புச்செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.

1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தால் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டுவரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் எழுதப்பட்ட கடிதங்களும், அவரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செவ்விகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டிற்குப் பின்னர், சர்வதேசக் கூட்டுமுயற்சிகளுடன் தமிழ் இனவழிப்பு எனும் நிகழ்ச்சி நிரல் மிகத்தெளிவான முறையில்  ஐந்தாக் கட்ட ஈழப்போராக நடாத்தப்பட்டு வருகின்றது. ஏராளமான தமிழர்களும், தமிழீழச் செயற்பாட்டாளர்களும் இத்திட்டங்களுக்குள் அறிந்தும் அறியாமலும் சிக்குண்டுவிட்டனர்.

தேச விடுதலை, இறைமை, சுயநிர்ணய உரிமை போன்ற எமது தவிர்க்கமுடியாத,தவிர்க்ககூடாத கோட்பாடுகளை புறந்தள்ளி எம்மவர்கள் பலர் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மெய்யான விடுதலை பற்றி மீள வலியுறுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது.book 2 cover print a4 “எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

இந்த நிலையில் இதுபோன்ற நூலின் மீள் வெளியீடு காலத்தின் தேவையாகிறது

எமது தேசிய சொத்தான இத்தகைய நூல்களை நாம் காண்பது அரிதாகிவிட்டது. இருக்கின்ற பல்வேறுபட்ட ஆவணங்கள் நூல்களை பலர் பதுக்கிவைத்து தமது தனியுடைமை போல் சொந்தம் கொண்டாடிவருகின்றனர்.

எமது தேசத்தின் வரலாற்றையும் , நாம் பயணிக்க வேண்டிய சரியான பாதையையும் தெளிவாக உணர்த்திநிற்கும் இத்தகைய நூல்கள் மற்றும் ஆவணங்கள் இன்றைய சந்ததிக்கு மட்டுமன்றி எமது எதிர்கால சந்ததிக்கும் அவசியமானவை.

எனவே இதனையுணர்ந்து நாம் அனைவரும் இவற்றைப் பாதுகாப்பது மட்டுமன்றி பரவலாக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். இதன் அடிப்படையிலேயே ‘எனது மக்களின் விடுதலைக்காக’ எனும் ஒப்பற்ற நூல் மீளவும் வெளிவருகிறது

நிகழ்வின் விபரங்கள்:

காலம்  –  04.08.2019 ஞாயிற்றுக்கிழமை,  காலை 11.00 மணி முதல்

இடம் –    தமிழர்களரி, 01 ஐரோப்பாத்திடல்  3008 பேர்ண், சுவிற்சர்லாந்து

                       தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.