எனது பெறுமதி என்ன என்பதை ஐ.தே.க. விரைவில் உணரும்: ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய தேசியக்கட்சி, எனது பெறுமதியை மிக விரைவில் கட்சி உணருமென நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க கைதாகின்றமைக்கு முன்னர் சிங்கள ஊடக மொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தன்னை விலக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானத்துக்கு நான் தலைவணங்குகிறேன். நான் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்கும் ஒருவன். எனவே கட்சியயான்றில் தொடர்ந்து இருக்கின்றமை சிரமமானது. அத்துடன் கட்சியிலிருந்து விலக்கியமைக்காக கட்சிக்கு சேறு அடிக்கும் நடவடிக்கையில் நான் ஒருபோதும் ஈடுபடமாட்டேன்.

நான் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றியடைந்தால் நாடாளுமன்றம் செல்வேன். தோல்வியடைந்தால் சினிமாத்துறைக்குச் செல்வேன். இன்னும் எந்தக் கட்சியயன்று தீர்மானிக்கவில்லை. நான் கட்சிக்காக நிறைய பணியாற்றியுள்ளேன். எனது பெறுமதியை கட்சி பின்னர் உணரும்” என்றார்.