எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” – பாகிஸ்தான்

“எங்களிடம் சிறிய சிறிய அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக அது பிரிக்கப்பட்டது.

இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்ைகக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் தொடர்பாக இந்திய நடவடிக்கை எவ்வாறு இருக்குமோ என்று பாகிஸ்தான் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய_பாகிஸ்தான் நிலைவரங்கள் தற்போது பரபரப்பு நிறைந்ததாகவே உள்ளன.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது பற்றிக் கூறுகையில், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாடு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக் கூடும் என்பதால் பாகிஸ்தான் மறைமுகமாக மிரட்டல் விடுத்திருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் லாகூரில் சீக்கியர்கள் மத்தியில் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள். தற்போது பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் உலகத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையும். போர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது” எனக் குறிப்பிட்டார்.