எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நீதிமன்றத்தில் மரணம்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நேற்று (17) திங்கட்கிழமை காலமானார்.

வழக்கிற்காக நேற்று கெய்ரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மொஹமட் முர்ஷி இருபது நிமிடங்கள் சட்டத்தரணிக்கு முன்னால் பேசியவுடன் திடீரென உபாதைக்குள்ளாகி மயக்க முற்றார். உடனடியாக கெய்ரோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சைப் பலனின்றி மொஹமட் முர்ஷி உயிரிழந்தார்.

எகிப்பதில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் 2010 இல் நடத்தப்பட்ட தேர்தலின் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மொஹமட் முர்ஷி, 2013 இல் இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். ஆறு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவர், அடிக்கடி வழக்குகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. நேற்றைய தினம் வழக்குக்குச் சென்று சட்டத்தரணி முன்னால் பேசிய பின்னரே மயக்கமுற்று மரணமடைந்தார்.