ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தொடரும் போராட்டம்.

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஊரடங்கு சட்டத்தையும் பொறுட்படுத்தாமல் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனோ தொற்றை தடுக்கும் ரீதியில் இலங்கை பூராகவும் நேற்று மாலை 06.00 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவ் ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் இன்றி வவுனியா நகரே வெறிச்சோடி காணப்படுகின்றது.
இந்நிலையிலும் வடக்கு கிழக்கு தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கொட்டகையில் 1127வது நாளாக சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.