கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் நகரசபையினால் நகரை அண்டிய பகுதிகளிலும், காமிணி மகா வித்தியாலய மைதானத்தினுள்ளும் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையினால் மக்கள் சுமுகமான முறையிலே பொருட்களை கொள்வனவு செய்தனர்.
வழமையைவிட இன்றைய தினம் நகரை நோக்கி வருகை தந்த மக்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்பட்டதை அவதானிக்ககூடியதாக இருந்தது.
மேலும் மருந்தகங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பல்பொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.