உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இதுவரை 89 சந்தேக நபர்கள் கைது-சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவீச்சு தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு திணைக்களமும் (Criminal Investigation Department – CID), பயங்கரவாத புலனாய்வு பிரிவும் (Terrorist Investigations Division -TID) 89 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதில் சிஐடியினர் 69 சந்தேக நபர்களையும் ரிஐடி 20 சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.