உணவு ஒறுப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் – தமிழ் தேசிய கட்சிகள் அறிவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டதைப் போல நாளை காலை முதல் மாலை வரையில் உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெறும் என தமிழ் தேசிய கட்சிகள் அறிவித்துள்ளன.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறாத வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உட்பட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவு இன்று மாலை எடுக்கப்பட்டது.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் நாளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து இந்த முடிவை தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.