ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வவுனியா பள்ளிவாசலில் பிரார்த்தனை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் நிறைவான இன்று குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வவுனியா நகர பள்ளிவாசலில் பிரார்த்தனைகள் இடம்பெற்றது.
முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளுமாறு கூறப்பட்டதன் அடிப்படையில் இப்பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்த நிலையில் வவுனியா நகர பள்ளிவாசலின் மௌலவி அமீர் தலைமையில் இப் பிரார்த்தனைகள் இடம்பெற்றது.

இதன்போது ஒரு சில இஸ்லாமியர்களே சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC05655 ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வவுனியா பள்ளிவாசலில் பிரார்த்தனை

DSC05648 ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வவுனியா பள்ளிவாசலில் பிரார்த்தனை

DSC05627 ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வவுனியா பள்ளிவாசலில் பிரார்த்தனை