ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது அமித்ஷா உத்தியோகபூர்வ அறிவிப்பு

இன்று(05) காலை நடிகர் ரஜனிகாந் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார். அதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான வழங்கப்பட முடியாது என்று கூறியிருக்கின்றார்.

இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜனிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பத்திரிகையாளர்கள் வினவிய போது  ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தான் நல்லது. அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு இப்படியான ஒரு சலுகையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு ஒரு மணிநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அவர் தனது பதிலில் அரசியலமைப்பின் பிரிவு 9இன் கீழ் இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் இது தொடர்பாக சிறீலங்கா அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பும் இல்லை என்று கூறியிருக்கின்றார்.

மேலும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் கோகுலகிருஸ்ணன், லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு, ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என்று மத்திய அரசின் இணை அமைச்சர் ஒருவர் பதிலளித்திருந்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் நிலை பற்றி இதுவரை மத்திய அரசு எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. முதன்முறையாக இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.