இலங்கை மாணவர்கள் 204 பேர் சீனாவிலிருந்து வெளியேறினர்

சீனாவில் இருந்து இதுவரை 204 இலங்கை மாணவர்கள் வெளியேறியுள்ளனர் எனச் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சீனா – வூகானிலுள்ள 33 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சீனாவில் உள்ள இலங்கை தூதகரகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், 4515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த டிசெம்பர் மாத இறுதியில் வூகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசா
லையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.