இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் முரளி படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத் திலிருந்து பிரபல நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முரளிதரன் இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார் 1992 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 133 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் பெண்ணோடு விக்கெட்டுகளை வீழ்த்திய முரளி சாதனை படைத்திருந்தார் இதனை கொண்டாடும் விதமாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் இன்னொரு என்ற பெயரில் திரைப்படமாக படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் இலங்கை அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்றும் சிங்கள கிராமங்களுக்கு உதவி செய்துவரும் அவர் தமிழர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என்றும் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்றும் ஈழத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தின் சில அமைப்புகளும் குரல் எழுப்பினர்

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு நெருக்கமான சிலர், இலங்கை தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் திரைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது, அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாவது உங்களுடைய எதிர்காலத்துக்கு நல்லதல்ல என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை குறித்த திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.