இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை

இலங்கையில், தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை, மீள அவர்களது நாடுகளுக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கின்றனர் எனவும் அவர்களை, அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான நட வடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வுள்ளன எனவும் அரசு அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.