இலங்கைபோக்குவரத்து சபை ஊழியர்களிற்கும் விடுமுறை!!

நாட்டில் கொரணா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக இலங்கை அரசு பல்வேறுநடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

அந்தவகையில் பொதுப்போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கைபோக்குவரத்து சபையின் அனைத்துஊழியர்களிற்கும் நாளையும்,நாளைமறுதினமும் என இரண்டுநாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவினை இலங்கைபோக்குவரத்து சபையின் தலைமை அலுவலகம் அனைத்து சாலைகளிற்கும் வழங்கியுள்ளது.

பொதுப்போக்குவரத்தின் ஊடாக கொரணாவைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதனை கருத்தில்கொண்டே குறித்தநடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.