இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை சீனா வழங்கியது

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கும் ஒப்பந்தத்தில் சீன அபிவிருத்தி வங்கி கையொப்பமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் திறைசேரிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல மற்றும் சீன அபிவிருத்தி வங்கி சார்பில் துணை இயக்குநர் வாங் வீ ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

சீன அபிவிருத்தி வங்கி இந்த வசதியை சலுகை விதிமுறைகளிலும், சலுகை வட்டி விகிதத்திலும் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.