இராவணன் பயன்படுத்திய வானூர்தி பற்றிய தகவல்களை தொல்பொருள் நிலையம் உள்ளடக்கியிருக்கும்.

பொலன்னறுவை தொல்பொருள் நிலையம் எதிர்வரும் ஜீலை மாதம் 3ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்  செய்தியாளர் மாநாடு  இடம்பெற்றது.  இங்கு பேசிய ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பி.கே.எஸ்.ரவீந்திர, இந்த நிலையத்திற்கு 900 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது  என்றும் இந்த நிலையத்தில் இலங்கையின் ஆதி மக்கள் முன்னெடுத்த தொழில்நுட்ப தகவல்கள் ஆகியவற்றை அறிந்துக்கொள்ள முடியும்எனவும் குறிப்பிட்டார்.

உலகில் ஏனைய நாடுகளின் தொழில்நுட்ப பாவனையிலும் பார்க்க இலங்கையில் இருந்த தொழில்நுட்பம் மிகவும் உயர்வானது என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் , பொலன்னறுவை மன்னர் காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை ஆய்வு செய்வதற்கும் அதனை பார்வையிடுவதற்கும் இங்கு வசதி உண்டு என்றும் தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் இராவணன் பயன்படுத்திய வாகன தகவலை அடிப்படையாகக் கொண்டே தற்பொழுது விண்ணில் பறக்கும் விமானம் தயாரிக்கப்பட்டதான தகவல் உண்டு இது தொடர்பான விடயங்கள் இந்த தொல்பொருள் நிலையத்தில் உள்ளதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார். இதனையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க தொழில்நுட்ப தகவல்கள் அறியக்கூடியதாகவும் ஆய்வு செய்யக்கூடியதாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெளிநாடுகளில் அதாவது இந்த துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் இந்த விடயம் வரவேற்கத்தக்கது. தற்பொழுது ஆங்கிலம் தமிழ் மொழிகளில் மாத்திரமே இந்த விடயங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்களும் அறிந்து கொள்வதற்கு வசதியாக மொழிப்பெயர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு வசதியாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக இதனை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை தொல்பொருள் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி.சுனைத்ரா கஸ்தூரி பிரதி பணிப்பாளர் செனரத் விக்ரம அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ மற்றும் டெலிகொம் நிறுவனத்தின் அதிகாரி சந்திரம தர்மதாச உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.