‘இரத்தத்திற்காக கத்தும் சில பௌத்த துறவிகள்’ ; நான் மன்னிப்புக்கோர வேண்டிய அவசியமில்லை – ரஞ்சன் ராமநாயக்க

மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால், மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்தார்.

“நான் ஒருபோதும் மகா சங்கத்தை அவமதிக்கும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நான் கூறியது என்னவென்றால், ஒரு சில துறவிகள் மட்டுமே இரத்தத்திற்காக கத்துகிறார்கள், இந்த துறவிகளில் 90 சதவீதம் பேர் தலைமை துறவிகளால் வழி நடத்தப்படுகிறார்கள். எனவே நான் சொன்னது என்னவென்றால், ஒரு சில துறவிகள் தலைமை துறவிகளால் வழிநடத்தல் செய்யப்படுகிறார்கள் என்றுதான்.

எனினும் நான் கூறிய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனது அறிக்கையை அதன் உள்ளடக்கத்தை சிதைத்து திரிபுபடுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.