இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு காவடி தூக்கும் வரதராஜப் பெருமாளின் செயலை கண்டிப்போம் – கஜேந்திரன்

இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு காவடி தூக்கும் வரதராஜப் பெருமாளின் தமிழ் மக்களுக்கான இரண்டகச் செயலை வன்மையாகக் கண்டிப்போம்.

தம்மைப் போராளிகள் எனச் சொல்லும் எவரும் செய்யத் துணியாத செயலை அவர் வெளிப்படையாக தன்னைப் போராளி எனக் கூறி கோத்தா என்ற கொடிய இனப்படுகொலையாளனை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் எனத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

” வரப்போகின்ற ஐனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற மற்றும் அறிவிக்கப்படக் கூடிய என்று பெயர்கள் அடிபடுகின்ற நபர்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறானவர்கள். தமிழ்த் தேசத்தினுடைய இருப்பிற்கு மாறானவர்கள். இவர்களில் யார் ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. நிச்சயமாக அவர்கள் தமிழ்த் தேசத்திற்கு எதிராகவே செயற்படுவார்கள்.

ஆகையினால் எந்தவொரு வேட்பாளரையும் தெரீவு செய்வதான முடிவிற்கு தமிழ் மக்கள் செல்வதில் எந்தவிதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லை.

இந்த இடத்திலே வரதராஐப் பெருமாள் அவர்கள் மக்களை தம் பக்கம் ஈர்க்கின்ற நோக்கத்தோடு தன்னுடைய கருத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதாவது தாங்கள் எல்லாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் என்றும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மட்டும் போராடவில்லை தாங்களும் போராடியவர்கள் என்று ஏதோ போலித் தோற்றமொன்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முற்படுகின்றார்……..” என்றார்.

போராட்டத்தை காட்டிக் கொடுத்து ஆதிக்க சக்திகளின் கைக்கூலிகளாக இருந்தவர்கள் போராளிகள் என மக்களை நம்பவைத்து இனப்படுகொலையாளர்களை ஆதரிப்பதை தமிழ் மக்கள் மன்னிக்கவோ ஏற்கவோ கூடாது.

இது குறித்த உரையில் கஜேந்திரன் மேலும் கூறுகையில் “ஏங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு விடயத்தை மறந்து விட்டார் என்றே கூறுகின்றொம். அதாவது தாங்கள் எல்லாம் இந்த விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டார்.

30ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய பொழுது இவர் உட்பட இவர் குறிப்பிட்ட அத்தனை தரப்புக்களும் இந்திய மற்றும் இலங்கை இரானுவத்தோடு இணைந்து இந்த விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்து சொந்த மக்களைக் கடத்திக் கொலை செய்து கப்பம் பெறுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தான்.

ஆகவே இவர்கள் தாம் விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூறுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்.

உலகத்திலே விடுதலைக்காக போராடுதல் என்பது அடக்குமுறை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் அந்த அரசினுடைய பிடியில் இருந்து விடுபட போராடவது தான் விடுதலைப் போராட்டமே தவிர அடக்குமறையாளர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுடப்பதும் அவர்களோட சேர்ந்து கொலைகளைச் செய்வதும் கப்பம் பெறுவதும் ஒரு போதும்; விடுதலைக்காக போராடுதல் என்று அர்த்தம் அல்ல!” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை ஏமாற்றும் சக்தி காலம் காலமாக களமிறக்கப்பட்டு மக்கள் கவனத்தை திசை திருப்ப முயன்று வருவது இது ஒன்றும் புதிது அல்ல.

எனவே தமிழ் மக்கள் தெளிவாக சிந்தித்து பயணிக்க வேண்டும்.

இனப்படுகொலையான மக்கள் இறந்தவர்கள் அல்லர். அவர்கள் நீதிக்காக இன்னமும் போரடிக்க கொண்டே இருப்பவர்கள் என்பதை மறந்து பேசும் எவரையும் தமிழ் மக்கள் மன்னிக்கக் கூடாது. மண்ணில் இடமளிக்கவும் கூடாது என தெரிவித்துள்ளார்.