இந்தியா இலங்கைக்கு அம்புலன்ஸ் வண்டிகளை அன்பளிப்பு செய்தது

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள “சுவசெரிய“ என்ற இலவச அம்புலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்குத் தேவையான அம்புலன்ஸ் வண்டிகளை இந்தியா வழங்கவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று அம்பாறையில் இந்திய உயர்ஸ்தானிகர் தரங்சித் சிங்சந்து தலைமையில்   நிகழவுள்ளது.

27 அம்புலன்ஸ் வண்டிகள் இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளன. அமைச்சர் ஹர்ஷ  டி சில்வாவின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக 88 வண்டிகளும், அதைத் தொடர்ந்து 209 வண்டிகளும் ஏற்கனவே வழங்கப்பட்டன. இதன் இறுதிக்கட்ட அன்பளிப்பாக இந்த 27 வண்டிகளும் வழங்கப்படுகின்றது.