இந்தியாவில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஈழ அகதி

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர் கோவில் கோட்டார் காவல் நிலையம் முன்பாக ஈழ  அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோயி என்ற இந்த அகதி சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமாரி வந்தார். பல இடங்களிலும் வேலை பார்த்து வந்தார். தற்போது வேலை இல்லாமல் இருக்கின்றார்.

நேற்று (23.08) கன்னியாகுமாரி காவல் நிலையம் சென்று தன்னை கைது செய்யும்படி கூறியுள்ளார். காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி அனுப்பியிருந்தனர்.

ஆனால் அவர் மண்ணெண்ணெய் வாங்கி வந்து உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அறிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.