இந்தியாவில் உள்ள இலங்கை அகதி முகாமில் மின்குமிழ் பாவனை தடை

தமிழ்நாடு கும்மிடிபூண்டி இலங்கை அகதி முகாமில் மின்குமிழ் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 இலங்கை தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அகதிமுகாம் அலுவலகத்தின் முன்னால் மின்குமிழ் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மின்சாரம் செலவாகும் மின்குமிழ் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், கடைகளில் மின்குமிழ் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் கடைகளில் மின்குமிழ் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.