இந்தியாவில் இதுவரை 5194 பேர் மட்டுமே பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.இவர்களில் 401 பேர் குணமடைந்துள்ளனர், 149 பேர் மரணமடைந்துள்ளார் மற்றும் 4643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரங்களில் மட்டும் 773 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் 35 பேர் மரணமடைந்துள்ளார் என்று இன்று காலை சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரி
கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கியபின் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் அதிகபட்ச மரணங்கள் நிகழ்ந்தது இதுதான்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1018ஆக உள்ளது. 690 மற்றும் 576 எனும் எண்ணிக்கையுடன் தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.