இந்தியப் படையின் ரண்வீர் கொழும்பு துறைமுகத்தில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரண்வீர் என்ற கப்பல் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இந்தக் கப்பல் 146 மீற்றர் நீளத்தைக் கொண்டதுடன் 4560 தொன் எடையைத் தாங்கிப் பயணிக்கக் கூடியதுமாகும்.கப்பலின் கட்டளை அதிகாரி ஷேதன் சந்திரதேவ், மேல் மாகாண கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.இக் கப்பலில் 273 இந்தியக் கடற்படையினர் விஜயம் செய்துள்ளனர். இவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.3 நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள ரண்வீர் எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக அறியப்படுகின்றது.