இத்தாலி, இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு தனது விமான சேவையை இரத்துச் செய்தது எயார் இந்தியா 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே பல நாடுகளுக்கு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இத்தாலி, இலங்கை உட்பட மேலும் 6 நாடுகளுக்கு சேவையை இரத்துச் செய்துள்ளதாக எயார் இந்தியா அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், பல நாடுகளின் விசா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் பல நாடுகளுக்கு விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எயார் இந்தியா விமான நிறுவனம் நேற்று ரோம் மற்றும் மிலனுக்கு சேவைகளை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இன்று இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், தென்கொரியா, இலங்கை உட்பட 6 நாடுகளுக்கும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை விமான சேவையை இரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.