ஆளுநர் முடிவெடுக்கும் வரை ஏழு தமிழர்களையும் விடுப்பில் விட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள்

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அமைச்சரவை தீரமானம் போட்டது. ஆளுநர் இன்னும் முடிவெடுக்க மறுக்கிறது. ஆகவே, ஆளுநர் முடிவெடுக்கும் வரை ஏழு தமிழரகளையும் விடுப்பில் விட வேண்டும் “என்பது தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு அக்கட்சியின் உறுப்பினர் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மெலும் தெரிவித்துள்ளதாவது:

நீதிமன்ற விடுப்பில் ஒரு மாத காலம் வெளியே வந்திருக்கும் சகோதரி நளினி முருகனை சந்திக்க அவர் தங்கியிருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள தோழர் சிங்கராயர் வீட்டுக்கு சென்றோம். நீதிமன்ற ஆணையை சொல்லி  அனுமதி மறுத்து விட்டது காவல்துறை.

விடுதலைச்சிறுத்தைகள் எப்போதும் நீதிமன்ற உத்தரவை ஏற்று நடப்பவர்கள் என்பதால், அமைதியாக திரும்பினோம்.

“தமிழக அரசு பேரறிவாளன், நளினி முருகன், சாந்தன், ஜெயக்குமார்,
ராபர்ட் பயாஸ்,ரவிச்சந்திரன், முருகன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அமைச்சரவை தீரமானம் போட்டது. ஆளுநர் இன்னும் முடிவெடுக்க மறுக்கிறது. ஆகவே, ஆளுநர் முடிவெடுக்கும் வரை ஏழு தமிழரகளையும் விடுப்பில் விட வேண்டும் “என்பது தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு.