ஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரேலியா தொகுதியில் காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை போட்டியிட அனுமதிக்குமாறு சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று (27) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முடிவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், அதனை கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான மகிந்தாவிடம் கையளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் தனது முடிவை பின்னர் அறிவிப்பதாக மகிந்த தெரிவித்துள்ளார்.