ஆராதனை நடத்திய போதகர் உட்பட 15 பேர் கைது! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வவுனியா செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்றய தினம் ஆராதனை நடாத்திய 15 ற்கும் மேற்பட்டோர் செட்டிகுளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ளதுடன் ஆலயங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடவேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா செட்டிகுளம் முதலியார் குளம் பகுதியில் இன்றய தினம் கிறிஸ்தவ மதஆராதனை ஒன்று நடைபெற்றருந்தது. இது தொடர்பாக செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய அப்பகுதிக்கு சென்ற பொலிசார் ஆராதனையை நடாத்திய போதகர் உட்பட 15 ற்கும் மேற்பட்டோரை கைதுசெய்திருந்ததுடன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.