ஆபிரிக்க விசேட தூதுவராக தமிழர் நியமனம்.

ஆபிரிக்காவிற்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று(03) அலரி மாளிகையில் வைத்து தூதுவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கியிருந்தார்.

முன்னாள் உகண்டாவின் உயர் ஸ்தானிகரான வேலுப்பிள்ளை கணநாதன், இலங்கைக்கான உகண்டாவின் தூதுவராக கடமையேற்றுள்ளார்.

இவர் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.