ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரம் வந்துவிட்டது – நாமல் ராஜபக்ஷ

அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்படும் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கான  நேரம் இப்போது வந்து விட்டது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகளும் வெற்றியடையுமா, தோல்வியடையுமா என்பது பற்றி சொல்ல முடியாது.

தவறென்று தெரிந்தும், பல அரசியல் காரணங்களை சுட்டிக்காட்டி, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பவர்களுக்கும் எதிராக மக்கள் செயற்படுவார்கள் என மேலும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தென்னிலங்கை அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஒன்று நிகழ்வதற்குரிய சாத்தியங்கள் தென்படுவதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா தலைமையிலான குழுவினர் ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அதனைத் தடுப்பதற்கு மேற்குலகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கோத்தபாயா மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னியும் அதுவே என தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு ஆதரவுகளை வழங்கவேண்டிய நிலைக்கு முஸ்லீம் சமூகம் தள்ளப்பட்டுள்ளதும், கோத்தபாயாவுக்கு சதகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.