ஆடை விதிமுறைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்து

ஆள் அடையாளத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பான வர்த்தகமாணி அறிவித்தலுக்கு அமைவாக நடந்துகொள்ளும்படி கல்வி அமைச்சால் பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.

முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து பலருக்கு சரியான விளக்கம் இன்மையால் பிரச்சினைகள் தோன்றியதையடுத்து இந்த கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
சில பட்ஸையாக்களில் ஆசிரியைகள் முகத்தை முழுமையாக மறைத்தபடி ஆடையணிந்து வந்ததும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் முகத்தை மறைத்தபடி தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த நிலைமை தொடர்பில் நடவடிக்கையை மேற்கொண்ட கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.