அவுஸ்திரேலியாவுடன் அரசியல் – பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவேன் – சறோஜா

அவுஸ்திரேலியாவிற்கான சிறிலங்கா தூதுவராக சறோஜா சிறிசேன நேற்று (02) தனது கடமைளைப் பொறுப்பேற்றார்.

தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின் உரையாற்றுகையில், அவுஸ்திரேலியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக அவுஸ்திரேலிய – சிறிலங்காவிற்கான நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் அரசுகளுடன் தமது உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு முன்னெடுத்து வருகின்றது. எனவே இளம் தலைமுறையினரையும், ஆளுமை மிக்க அதிகாரிகளையும் அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திரிகளாக சிறீலங்கா அரசு நியமித்து வருகின்றது.