அவசர நிவாரணப் பொருட்கள் வழங்க மகிந்த ராஜபக்ஸ ஏற்பாடு

கிராம சேவகர்கள் பிரிவுகள் மூலம் அவசர நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக ஒரு கிராம சேவகர் பிரிவிற்கும் தலா 1 மில்லியன் ரூபாய் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிதி ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு மிகவும் உதவியாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.