அரசு-கூட்டமைப்பு சந்திப்பின் பின்புலத்தில் பல காரணிகள் இருக்கின்றன என அரசியல் ஆய்வாளர் திரு.யோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டமைப்பு,அரசதரப்பு,எதிர்தரப்புகள் என பல்வேறு தரப்புகளும் பல்வேறு விடையங்களை பேசிவரும் நிலையில் குறித்த ஆய்வாளரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகத் காணப்படுகிறது.
அரசு-கூட்டமைப்பு சந்திப்பின் பின்புலம் தொடர்பில் அவர் பட்டியலிட்டுள்ள காரணிகளை இங்கு தருகிறோம்.
1.புவிசார் அரசியல்
2.இந்தியாவின் ஆலோசனை
3.கூட்டமைப்பின் தேவைகள்
4.மக்களின் பிரச்சினையை அரசிடம் முன்வைத்தோம் எனக்காட்ட வேண்டிய தேவை
5.சுமந்திரனின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேவை
6.அரசின் பாதுகாப்பையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ளுதல்
7.சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சம்பந்தனின் இயல்புகள்
8.அரசின்தேவைகள்
9.புவிசார் அரசியலினால் வரும் அழுத்தங்களைக் குறைத்தல்
10.இந்தியாவின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பதாக காட்டுதல்
11.எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பலவீனமாக்குதல்
12.அரசிற்கு வெளியில் நிற்கும் மக்கள் பிரிவை அணைத்து செல்கின்றோம் எனக்காட்டவேண்டிய நிர்ப்பந்தம்