அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ரஷ்ய போர்க்கப்பல்கள்

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ரஷ்யாவின் 3 போர்க்கப்பல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை சிறீலங்கா கடற்படை உறுதி செய்துள்ளது.

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களான அட்மிரல் ட்ரிபக், அட்மிரல் வினோகிராடோவ் மற்றும் போரிஸ் புட்டோமா ஆகிய கப்பல்களே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இக்கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவே அங்கு வந்ததாகவும், கப்பலில் வந்த குழுவினர் ஓய்வு எடுக்கவும் அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 3ஆம் திகதி அவர்கள் புறப்படவுள்ளதாகவும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.