அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளில் அதிகரித்துவரும் கடலரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தழிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள மீனவ வாடிகள் மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள தென்னை மரங்கள் கடல் அரிப்பினால் கடலினுள் இழுத்து செல்லப்பட்டுள்ளன .

மேலும் பல தென்னை மரங்கள் கடலரிப்பால் கடலினுள் இழுத்து செல்லப்படும் தறுவாயில் உள்ளது .

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்கரை பிரதேசங்கள் கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டு கடற்றொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இவ் கடலரிப்பு குறித்து அரசியல் வாதிகளுக்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் பல தடவை மக்கள் தெரிய படுத்தியும் பாராமுகமாக இருப்பதாக அப் பகுதி வாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.