அமைதிப் பணிக்கு செல்கின்றனர் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள்

சூடான், யேமனில் அமைதிப் படையணியில் இணைய சிறிலங்கா இராணுவத்திலிருந்து 69 இராணுவத்தினர் தெரிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கான மனித உரிமை அறிக்கை கிடைப்பதில் காலதாமதமாகுவதால் , இவர்கள் சூடானுக்கான விசாவை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. இதனால் இவர்களின் பயணம் தாமதமாகின்றது என  கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்திற்கு அனைத்துலக மட்டத்தில் அமைதிப் பணியில் ஈடுபடும் அங்கிகாரத்தை வழங்குவது தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளைத் தோற்றுவித்துள்ளதுடன், அனைத்துலக சமூகத்தின் மீதான நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.