ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சிறீலங்கா பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 17 ஆம் நாள் வெளியிடப்பட்ட அந்த ஒழுங்கு பத்திரத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரனையாக குறித்த நம்பிக்கையில்லா பிரேரனை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கையொப்பம் இட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளதுடன் அமைச்சர் மீதான 10 குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி முற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டும் சபாநாயகர் , மேற்படி நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் கலந்துரையாடி விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிப்பார்.