அமெரிக்க முக்கிய அதிகாரி கொழும்பு வருகின்றார்: உயர் தலைவர்களுடன் பேச்சு

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் முக்கிய அதிகாரியான ஆலிஸ் ஜி வெல்ஸ் அடுத்த வாரம் இரு தரப்பு சந்திப்புகளுக்காக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வரவுள்ளார்.

அவர் தனது தெற்காசியப் பயணத்தை இலங்கையிலிருந்து தொடங்கஉள்ளார். அவர் நாளை மறுதினம் கொழும்பில் இருப்பார்.

தனது சந்திப்புகளின்போது, மூத்த அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து, இரு தரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார். இதில் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட நலன்கள், வளர்ச்சி, ஜனநாயகம், நீதி மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்துப் பேசப்படும்.

இலங்கைப் பயணத்தின் பின்னர், வெல்ஸ் ஜனவரி 15 – 18 ஆம் திகதிகளில் இந்தியாவில் தங்கியிருப்பார். பின்னர், ஜனவரி 19 – 22 ஆம் திகதிகளில் அவர் இஸ்லாமாபாத் செல்வார்