அனுமதிப்பத்திரங்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விதிகளை மீறிவோர் தொடர்பில் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இன மற்றும் மத பேதங்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தரப்பினருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.