சுவிஸ் இளைய தலைமுறையின் தாயகம் சார் அமைப்பான ‘அக்கினிப்பறவைகள்’ அமைப்பினர் தாயகம் நோக்கிய பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது நாமறிந்ததே. இந்த வகையில் அவர்களின் மற்றுமொரு முயற்சியாக மாதாந்த செய்தித்தாள் ஒன்றை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் அவர்கள் அறிக்கை ஒன்றினையும்
வெளியிட்டுள்ளனர்.
அன்புடையீர் வணக்கம்,
அக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவாகிய நாம், கடந்த ஆண்டுகளில் பல ஊடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆவணப்படுத்தல், ஆய்வுக்கட்டுரைகள், அரசியற் காணொளிகள் போன்ற பல முயற்சிகளில் அடித்தளத்தினை அமைத்துவரும் நாம், ”அக்கினிப் பறவைகள்” எனப் பெயர் சூட்டப்பட்ட ஆங்கிலத்திலும் தமிழிலும் மாதாந்தம் வெளிவரவிருக்கும் செய்தித்தாழின் முதலாவது இதழினை உங்கள் கைகளில் தருவதை ஒட்டிப் பெருமிதமடைகின்றோம்.
இப்புதுமுயற்சியில் காலடியெடுத்துவைக்கும் வேளையில் தமிழிறைமையினை என்றென்றும் விட்டுக்கொடுக்காது நிலைநாட்டுவதற்காக உழைக்கும் எம்முடன் இணைந்து பயணிக்குமாறு பணிவன்புடன் வேண்டி நிற்கிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
வெல்வது உறுதி