கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் தெரிவான 100 விவசாயிகளுக்கு கொடித்தோடை பயிரிட தலா 60 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
நவீன விவசாயத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கான கொடித்தோடை கன்றுகள் இன்று(12) வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாகாண பிரதி திட்டமிடல் பணிப்பாளர் க.பத்மநாதன், கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் அற்புதச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.