மகிந்த அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று (23) சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலினா பி.டெப்லிட்ஸை தனது கொழும்பிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில், சிறிலங்கா – அமெரிக்காவிற்கிடையிலான 3 ஒப்பந்தங்கள் குறித்து கவலை வெளியிட்டிருந்தார்.