Tamil News
Home செய்திகள் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினரின் சிறிலங்காவிற்கான பயணம் சாத்தியமற்றதாகின்றது

பங்களாதேஷ் கிரிக்கட் அணியினரின் சிறிலங்காவிற்கான பயணம் சாத்தியமற்றதாகின்றது

கடந்த மாதம் நடைபெற்ற ஈஸ்டர் தின குண்டு வெடிப்பை அடுத்து, மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் சிறிலங்காவிற்கு மேற் கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச் செய்ய திட்டமிட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்குபற்றுவதற்காக பங்களாதேஷ் அணியினர் கடந்த டிசம்பர் முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எமது அணி மட்டுமல்ல வேறு எந்த ஒரு அணியும் விளையாட்டில் பங்குபற்றாது என  பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹாசன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் பாதுகாப்பு தொடர்பாக உறுதியளித்த போதும், நாங்கள் அங்கு செல்வதாக எந்த திட்டமும் இல்லை என அந்த அதிகாரி மேலும் கூறினார்.

மார்ச் மாதம் 15ஆம் திகதி நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடைபெற்ற சமயம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் 50 மீட்டர் துாரத்தில் ஒரு பரீட்சார்த்த போட்டியில் விளையாடுவதற்காக நகரத்தில் தங்கியிருந்தனர். உடனே போட்டிகள் ரத்துச் செய்யப்பட்டன.

Exit mobile version