முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இன்று 29.07 யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் மதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அத்துடன் மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ். ஆயர் இல்லத்திற்குச் சென்று ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்தனர். அத்துடன் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நல்லூர் ஆதீனத்திற்கு சென்று ஆதீனக் குருமுதல்வர் ஞானதேசிக சோமசுந்தர சிவாச்சாரியார் சுவாமிகளைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்புக்களில் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர் றொசான் உட்பட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் குறிப்பாக சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார்.