தொற்று இனங்காணப்பட்ட 31 பேரில் 25 பேர் படையினர்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக நேற்று இனங்காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட 4 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய ஆறு பேரும் கடற்படையினருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எனவும் தெரிவிக்கபபடுகின்றது.

இதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 619 ஆக அதிகரித்திருக்கின்றது.