தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் சிறீலங்கா காவல்துறையினர்

யாழ். வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிசார் சிறிய குற்றங்களுக்கும் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக வசூலிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இலஞ்சம் பெறுவதுடன், வாகனத்தில் வரும் வயது முதிர்ந்தவர்களுக்குக்கூட இலஞ்சம் பெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் நெல்லியடி பஸ் நிலையத்தில் நின்ற போக்குவரத்துப் பொலிசார் மூன்று இளைஞர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு போடப்போவதாக கூறி இலஞ்சம் பெற்றுள்ளனர். அத்துடன் அங்குள்ள மலசலகூடப் பகுதிக்கு செல்லுமாறு கூறி அங்கு வைத்தே இலஞ்ச் பெற்றுகொள்கின்றனர்.

இது தொடர்பாக உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.