தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில்விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது – யோகேஸ்வரன்

தற்போதைய அரசாங்கம் எங்களுக்கு தீர்வினை விரைவாக தருவதாக கூறினார்கள்.அதற்கு முன்னோடியாக புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்தார்கள்.ஆனால் தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில்விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது.என என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் விடுதலைப்புலிகளினாலும் அவர்களினால் வழிநடாத்தப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியினாலுமே உருவாக்கப்பட்டதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கற்றல் வள நிலைய கட்டிட திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.IMG 0056 1 தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில்விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது - யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அறுபது இலட்சம் ரூபா செலவில் அண்மையில் உள்ள சிறந்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப பிரிவு மாணவர்களின் திறனை விருத்திசெய்யும் வகையில் நவீன கற்றல்செயற்பாடுகளைக்கொண்டதாக இந்த கற்றல்வள நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

2015ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதி ஒருவரை கொண்டுவருவதில் தமிழ் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உறுதியாக இருந்தார்கள்.இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான உறுதியான தீர்வினை வழங்காது தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தினை மௌனிக்க செய்த மகிந்த ராஜபக்ஸவினை வீட்டுக்கு அனுப்புவதில் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தோம்.

தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்த நாட்டில் அட்டூழியங்களை செய்த ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினோம்.புதிய ஜனாதிபதியை கொண்டுவந்தோம்.அதன் பின்னர் புதிய அரசாங்கம் கொண்டுவரப்பட்டது.

நாங்கள் அபிவிருத்தியை மட்டும் மையமாக கொண்டுசெயற்படவில்லை.தமிழ் மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படவேண்டும்.அதற்காகத்தான் அகிம்சை ரீதியாக போராடியபோது அதற்கு சிறுபான்மை சமூகம் சரியான தீர்வினை வழங்காத காரணத்தினால் ஆயுதம் தூக்கி எமது இளைஞாகள் போராட்டங்களை நடாத்தினார்கள்.IMG 0101 1 தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில்விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது - யோகேஸ்வரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக பல பேச்சுவார்த்தைகளை ராஜபக்ஸ அரசாங்கத்துடன் மேற்கொண்டது.எல்லாம் ஏமாற்றுவித்தையாகவே இருந்தது. அதனைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் திட்டங்கள் ஊடாக நிதிகளை வழங்கினாலும் எங்களது அபிலாசைகளை தீர்ப்பதில் முன்பு இருந்த அரசாங்கம்போல்தான் செயற்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் எங்களுக்கு தீர்வினை விரைவாக தருவதாக கூறினார்கள்.அதற்கு முன்னோடியாக புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்தார்கள்.ஆனால் தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில்விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது.

மகிந்தவாக இருக்கலாம்,மைத்திரியாக இருக்கலாம்,ரணிலாக இருக்கலாம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் இருட்டடிப்பு செய்கின்றார்கள்.தற்போது ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கின்றது,வேட்பாளர் பிரச்சினை ஐக்கிய தேசிய கட்சியில் உருவாகியுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதிவேட்பாளராக நியமிக்கவேண்டும் என பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன,மறுபக்கம் கருஜயசூரியவை நியமிக்குமாறு கோரப்படுகின்றது,இன்னுமொரு பக்கம் ரணிலே வேட்பாளராக வரவேண்டும் என்ற கோரிக்கையிருக்கின்றது.ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளர் நியமனம் தொடர்பில்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என மக்கள் எங்களிடம் கேட்கின்றனர்.நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. ரணில்விக்ரமசிங்கவும் எங்களை ஏமாற்றியவர்தான்,மகிந்தராஜபக்ஸவும் எங்களை ஏமாற்றியவர்தான்ääமைத்திரிபால சிறிசேனவும் எங்களை ஏமாற்றியவர்தான்.

சஜித் பிரேமதாச எங்களுக்கு உத்தரவாதங்களை வழங்கினாலும் அதனை எவ்வாறு கையாள்வார் என்பதை நாங்கள் சிந்தித்தே முடிவுகளை எடுக்கவேண்டும்.அவரும் எங்களை ஏமாற்றமாட்டார் என்று எங்களால் கூறமுடியாது.நாங்கள் ஏமாந்த சமூகமாக இருக்கின்றோம்.அதற்காக நாங்கள் ஓடிஒழியமாட்டோம்.நாங்கள் எங்கள் கொள்கையில் இருந்துமாறமாட்டோம்.

எங்களது மக்களின் அபிலாசைகளை தீர்த்துவிட்டு அபிவிருத்திகளை தாருங்கள் என்றே நாங்கள் கோருகின்றறோம்.ஆனாலும் எங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை எங்கள் ஊடாகவே மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.

இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் சில அமைப்பாளர்கள் கட்டிடங்களை திறக்கின்றனர்.ஒக்டோபர் 26ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது அணிந்திருந்த பச்சை சேட்டை கழட்டிவிட்டு நீல சேட் போடலாமா என சிந்தித்தவர்கள் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கட்டிடங்களை திறக்கின்றனர்.

நாங்கள் கொள்கையிலும் ஒன்றாகத்தான் இருப்போம்.நாங்கள் உழகை;கவந்தர்கள் அல்ல,உரிமைக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராகவந்தவர்கள்.IMG 0058 தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில்விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது - யோகேஸ்வரன்

நாங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் துப்பாக்கிகளுக்கு மத்தியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சேவையாற்றியவர்கள்.மிகவும் கடுமையான நேரத்தில் நாங்கள் எங்கள் சேவையினை செய்துள்ளோம்.மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து சேவைகளை செய்தோம்.கட்சியை வளர்ப்பதிலும் நாங்கள் கூடிய அக்கரையுடன் செயற்பட்டோம்.அப்போது பலர் எங்களுக்கு கைகொடுக்கவில்லை.

தற்போது பலர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள்.அவர்களின் சிலர் எங்களது கட்சிக்கு எந்தவகையிலும் ஆதரவுவழங்கவில்லை.பல துன்பங்களுக்கு மத்தியில் கட்சியை வளர்த்தோம்.

மட்டக்களப்பு மேற்கு வலயம் வந்தது என்றால் அது யாரால் வந்தது என்பதை மக்கள் உணரவேண்டும்.இந்த கல்வி வலயம் உருவாவதற்கு மூல காரணகர்த்தாவாக இருந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள்தான் இதில் கூடிய அக்கரைகாட்டினார்கள். அதற்கு சாதகமாக அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேத்திரனையும்,செல்வி தங்கேஸவரியையும் பயன்படுத்தினார்கள்.இவர்கள்தான் இந்த வலயம் உருவாகுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

மத்தியில் இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு,மாகாணத்திற்குவந்தபோது மாகாணத்தில் உள்ளவர்கள் அதனை செயற்படுத்தவேண்டும்.அதுதான் நடைபெற்றது.ஆனால் எங்களுடன் இருக்கின்ற சிலரே எங்களுடன் இருந்துகொண்டு எங்களது கையை பிடித்து எங்களது கண்ணில் குத்துவது போன்று இந்த வலயத்தினை கொண்டுவந்தவர் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன்தான் என்று பிரசாரம்செய்கின்றார்கள்.வெட்கப்படவேண்டிய விடயம்.தமிழீழ விடுதலைப்புலிகள்தான் இந்த வலயத்தினை கொண்டுவந்தவர்கள்.அவர்கள் தொடர்பில் இவர்கள்பேசமாட்டார்கள்.ஏன் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் அவர்கள்.

இன்று ரணில்விக்ரமசிங்க அரசாங்கம் இந்த ஆட்சியில் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்ப வழங்கிய ஆதரவே காரணமாகும்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் சஜீத் பிரேமதாச பேசியிருக்கின்றார்.ஆறு மாதங்களுக்குள் தமிழர்களுக்கான தீர்விற்கு வழியேற்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளதாக அறிகின்றோம்.ஆனால் அது தமிழ் மக்களின் நீண்டகால புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையுமாக இருந்தால் மட்டுமே அவரது கருத்து கருத்தில்கொள்ளப்படும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமாக இருக்கலாம்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாக இருக்கலாம்,மொட்டுவாக இருக்கலாம் தமிழ் மக்களின் விடயத்திலேயே நாங்கள் கரிசனையாக இருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாரும்பேசலாம்.ஆனால் நாங்கள் சிங்கள தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்திருக்கின்றோம்.அதனால் மூன்றாவது நாட்டின் அனுசரணையுடன் சரியான முறையிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே ஒப்பந்தம் செய்யும் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.இன்னும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராகயில்லை.

யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான தீர்மானத்தினை எங்கள் கட்சி தலைவர் வழங்குவார்.அதற்கு அமைவாக எங்களது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.நாங்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் தமிழ் மக்களை பாதிக்காத வகையிலேயே முன்னெடுக்கப்படும்.

தமிழ் மக்களின் எதிர்காலத்தினை பெற்றெடுப்பதில் நாங்கள் உறுதியாகஇருக்கின்றோம்.அதனால்தான் இந்த அரசாங்கம் எங்களுக்கு அமைச்சு பதவி ஆசைகளை காட்டியபோதிலும்ääஇடைக்கால ஆட்சியில் சிலர் பணங்களை வழங்க தீர்மானித்தபோதிலும் அனைத்தையும் தூக்கியெறிந்தோம்.எங்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளே முக்கியமாகும்.

அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்கவில்லை.காப்பட் வீதிக்காகவும் மாடி கட்டிடங்களுக்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த மண்ணில் உயிர்களை தியாகம்செய்யவில்லை.

இன்று ஒரு குடும்பத்தினை பார்த்தால் அமைச்சர் ரிசாத் ,அமீர்அலியின் அமைப்பாளராக தந்தையிருக்கின்றார்,மகன் அமைச்சர் மனோகணேசனின் அமைப்பாளர்.கணவன் முஸ்லிம்களின் அமைப்பாளர்,மகன் ஒரு தமிழனின் அமைப்பாளன் என்டால் மனைவி ஒரு சிங்களவரின் அமைப்பாளராகவே இருக்கவேண்டும்.இவர்கள் தேர்தல் காலங்களில் பல வடிவங்களில் வருவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிழைவிட்டால் அதனை தட்டிக்கேட்கவேண்டிய உரிமை மக்களுக்கு உள்ளது.ஆனால் முகம்தெரியாத இணையத்தளங்களில் வந்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை.