Tamil News
Home செய்திகள் தடைகளை தாண்டி தியாக தீபம் திலீபனின் நினைவு வாரம் ஆரம்பம்

தடைகளை தாண்டி தியாக தீபம் திலீபனின் நினைவு வாரம் ஆரம்பம்

தடைகளை தாண்டி தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவு வாரம் இன்று தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கோண்டாவில் பகுதியில் நினைவு தினம் சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அனுமதி வழங்க கூடாது  என நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற கட்டளை பெறப்பட்டுள்ள நிலையில் குறித்த தடைகளை மீறி இந்த நினைவு  வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version