செயற்பாட்டாளர் டேவிட் பெரியாரின் மகனின் இழப்பு துயரமானது

தமிழகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் டேவிட் பெரியாரின் மகன் மில்லர் திலீபன் நேற்று (21) மாலை தவறுதலாக ஏரியில் மூழ்கி மரணத்தை தழுவியுள்ளார்.

இந்த தகவல் தமிழகம், தாயகம் மற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

தனது மகன் சமூக அர்ப்பணிப்பில் ஒரு மில்லரைப் போலவோ அல்லது தியாகி திலீபனைப் போலவோ தியாக உணர்வுடன் வாழவேண்டும் என்று கனவு கண்ட ஒரு தந்தைக்கு தமிழ் மக்கள் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.